Saturday, 11th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ராசிபுரம்: ராசிபுரம் அருகேயுள்ள நாமகிரிப்பேட்டை கிரீன் வேர்ல்டு எக்ஸல் பள்ளியின் மாணவ மாணவியர்கள் தயாரித்த உணவு பொருட்களை ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு வழங்கி மகிழ்ந்தனர்.
கிரீன் வேர்ல்டு எக்ஸல் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்கள் பள்ளி வளாகத்தில் அண்மையில் ஃபுட் ஸ்டால் எனப்படும் உணவுத் திருவிழா நடத்தினர்.
இதில் மாணவ, மாணவியர்களால் தயாரித்து வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்கள் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களிடையே விற்பனை செய்யப்பட்டது. மாணவர்களிடம் உற்பத்தி திறன், சந்தைப்படுத்துதல், விற்பனை திறன் போன்றவற்றை ஊக்குவிக்கும் வகையில் இது போன்ற உணவுத் திருவிழா நடத்தப்பட்டது.
இதில் கிடைத்த லாபத்தினை தீபாவளியை மகிழ்வுடன் கொண்டாடும் வகையில் ஆதரவற்றோருக்கு உணவுப் பொருட்களாக வழங்க முடிவு செய்தனர்.
இதனையடுத்து ராசிபுரம் காட்டூர் சாலையில் உள்ள அணைக்கும் கரங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள முதியோர்கள், ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆசிரியர்களும், மாணவர்களும் நேரில் சென்று அரிசி, எண்ணெய், கோதுமை மாவு, பிஸ்கட், சோப்பு, துண்டு, சில்வர் பாத்திரங்கள், இனிப்பு போன்றவற்றையும், நிதியுதவியும் அளித்து, ஆதரவற்றோருடன் நடனமாடினர்.
தொடர்ந்து பல்வேறு விளையாட்டு போட்டிகளும் நடத்தி அவர்களுடன் உற்சாகமாகக் கொண்டாடினர்.